கொழும்பிற்கு வரும் வாகன சாரதிகளுக்கு பொலிஸார் அவசர அறிவிப்பு!
கொழும்பு - குருந்துவத்தை - பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் நடைபெறவுள்ள வருடாந்த பெரஹரா காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியைப் பயன்படுத்துவோர், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விகாரையின் வருடாந்த பெரஹரா இன்றைய தினம் (06.03.2023) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரஹரா பௌதாலோக மாவத்தை, கனத்த சுற்று வட்டம், பேஸ்லைன் வீதி பொரளை சந்தி, மருதானை வீதி, பேஸ்லைன் குறுக்கு வீதி, லெஸ்லி ரணகல சந்தி ஆகிய இடங்களில் திரும்பி, அதே பாதையில் விகாரைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக் கூறப்படுகின்றது.
இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்றும் அசௌகரியத்தைத் தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.