காத்தான்குடியில் சட்டவிரோதமான பொருடளுடன் இருவரை கைது செய்த பொலிஸார்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (02-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது.
மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் படி காத்தான்குடி பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு காத்தான்குடி கர்ப்பலா பிரதேசத்தில் வைத்து 45 வயதுடைய ஒருவரை 60 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
இதேவேளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் 42 வயதுடைய ஒருவரை 2.60 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.