விஷமாகி வரும் உணவுக்கடை உணவுகள்...மக்களே அவதானம்
முன்பெல்லாம் முன்னோர்கள் உணவே மருந்து என கூறியிருந்தனர். ஆனால் தற்போது நாளடைவில் நோயை விற்று பணம் பண்ணுவதில் உணவுக் கடைக்காரர்கள் விற்பனை செய்கின்றனர்.
உணவு என்பதன் கவர்ச்சி கண் பார்வையில் தொடங்கி மணம், உருசி என்று ஏறி வயிற்றுக்குள் இறங்கி பசி தீர்க்கும். இரும்புக்கும் இரும்புக்கும் நடுவில் அகப்பட்டு நசுங்கும் உணவானது நமது வயிற்றுக்குள் சென்று சமிபாடடைந்து இரத்தவோட்டத்தினூடாக உச்சி முதல் உள்ளங்கால் வரை சென்று நிரப்புகிறது. இதில், மூளை தொட்டு இதயம் சிறுநீரகம் வரையுமான மென்னுறுப்புகளும் அடங்குகின்றன.
ஒருவர் கொத்து வாங்க கடைக்கு சென்றுள்ளார். அங்கு கொத்துபவரின் லாவண்யத்தை இரசித்துக்கொண்டிருந்த வேளைஅவர் ஒன்றை அவதானித்தேன். கொத்துகிற- இரும்பாலான இரண்டு கொத்துக் கரண்டிகளின் அடிப்பாகம் வெளுப்பேறி இரும்புத் துகள்களை இழந்து தேய்ந்திருந்ததையும், அடுப்பின் மேல் ஏற்கனவே வெந்து வேகிய ரொட்டித்துண்டுகளை தாங்கியிருந்த தட்டு வடிவிலான இரும்பு ரொட்டிக் கல்லின் நடுப்பாகம் வெளுறியும் இரும்புத் துகள்களை இழந்தும் குவிந்து தேய்ந்திருப்பதையும் கண்ணுற்றேன்.
தட்டும் கரண்டிகளும் இழந்த இரும்புத் துகள்கள் உணவோடு நம் உடலுக்குள் புகுந்து இரும்புச் சத்தையா தரும்? இல்லை, சமிபாடடையாமல் உடல் முழுவதும் நமது வாழ்நாட்கள் முழுவதுமாக மரதன் ஒடும் இத்துகள்கள்; நம் வாழ்க்கையை நோய் காலமாக்கி மரணத்தை விரைவாக்கும் வல்லமை கொண்டது காணீர்.
இவ்வளவு காலமும் எத்தனை கொத்துரொட்டிகள் உண்டிருப்மோம்.. ஓராயிரம் இருக்குமா ..? ஒரு கொத்தில் ஒரு இரும்புத் துகள் போயிருந்தால் ஆயிரம் துகள்கள் ஓடுமே நம்முடலில்!