பிண்ணனி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
சிறுநீரக புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த (25.01.2024) ஆம் திகதி மாலை காலமானார்.
அவரின் உடல் நேற்று (24.01.2024) விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று மாலை வரை மக்கள் அஞ்சலிக்காக தியாராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் பவதாரிணியின் உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்தியேக அமரர் ஊர்தி மூலம் நேற்று இரவு எடுத்துச் சென்றனர்.
தேனி, லோயர்கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் பண்ணை தோட்டத்தில் பவதாரிணி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் நினைவிடத்திற்கு இடையில் பவதாரிணியின் உடல் மாலை (05.01.2024) மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.