தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும்
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் தீபாவளி விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளதாவது,
”தோட்ட தொழிலாளர்கள் வருடம் முழுவதும் கம்பனிகளுக்கு வருவாய் ஈட்டி கொடுப்பதற்காகக் கடுமையாக உழைக்கின்றனர்.
எனவே நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு வருடம் முழுவதும் கம்பனிக்காக உழைக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாமான முறையில் தீபாவளிக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காது ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி விசேட கொடுப்பனவு வழங்குவது குறித்து இன்று அறிவிப்பதாக கம்பனிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.