குழந்தை வரம் இல்லாத தம்பதியினருக்கு கிரக அமைப்பு முக்கிய காரணமா?
குழந்தை ஒரு குடும்பத்தின் வரம் என்றே சொல்லலாம். குழந்தை வரம் இல்லாத சில தம்பதியினர் படக்கூடிய அவமானம், மன வேதனை சொல்லி மாளாது.
குழந்தை இன்மைக்கு உடல் நல பிரச்னையைத் தாண்டி ஒருவரின் கிரக அமைப்பு மிக முக்கியமானதாக அமைகிறது.
ஒரு வீட்டின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைவது அந்த தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்.
குழந்தை இன்மைக்கு ஜோதிட காரணம்
குழந்தை வரம் பெற நம்முடைய ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டியது 5 மற்றும் 9ம் பாவங்கள்.
திருமணம் இல்லற சுகம், தம்பதிகளின் ஒற்றுமைக்கு சுக்கிரன் காரணமாக இருந்தாலும் புத்திர பாக்கியத்திற்கு முக்கிய காரண கிரகமாக விளங்குவது வியாழன் பகவான்.
ஜாதகத்தில் அமைந்திருக்கும்.குரு பகவான் பலம் மற்றும் பலவீனங்களை வைத்து குழந்தை பிறப்பு சாத்தியமா இல்லையா என்பதை குறிப்பிட முடியாது என்று கூறப்படுகின்றது.
குழந்தை இல்லாத கிரக நிலை ஜோதிடம்
பல்வேறு கிரக சேர்க்கைகள் ஒரு குழந்தை கருவுறுதலுக்கான காரணிகள் கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன:
குழந்தை இல்லாத கிரக நிலை
பூர்வ புண்ணிய வீடான 5ம் வீட்டு அதிபதி குரு பகவானுக்கும் அசுப கிரகங்களுக்கு இடையில் அமைந்திருந்தால் அல்லது அந்த கிரகம் குருவின் தோஷம் சேர்ந்திருந்தால் அவர்கள் குழந்தை இழப்பை சந்திக்க நேரிடும்.
1, 5 மற்றும் 7 வது வீடுகளின் அதிபதி சுபர்களாக அல்லது பாவகிரகங்களாக அமைந்து மற்றும் குரு சேர்க்கை உருவாகும் போது எதிர்மறையான பலன் கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படுதல்.
5ம் வீட்டிலும், 5ம் வீட்டு அதிபதி தோஷத்துடன் பலவீனமாக இருக்கும் நிலை குழந்தை பாக்கியம் இல்லாத நிலை உருவாக்கலாம்.
குழந்தை இல்லாமைக்கான யோக அமைப்பு
விருச்சிகம், கன்னி, ரிஷபம் மற்றும் சிம்மம் மலட்டு ராசிகள் என்று கூறப்படுகின்றது.
இந்திய வேத ஜோதிடத்தின் படி சனி 12 ஆம் வீட்டில் அமர்வதால், தனுசு ராசிக்கு 5ம் வீடு பாதிப்பதால், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம் என்று கூறுகிறது.
கடக ராசிக்கும் இத்ஹே போல 12 ஆம் வீட்டில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியத்திற்கான தடை ஏற்படலாம்.
ஏனெனில் தனுசு, கடக ராசிக்கு 5ம் பாவ அதிபதி செவ்வாயாக அமர்வது தான் இதற்கு காரணம்.
குழந்தையின்மைக்கான யோகம்
குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பல காரணிகளைப் பொறுத்தது அவற்றில் ஒன்று ஜாதகத்தில் நபுன்சக யோகம் காரணமாகலாம்.
பிருஹத் பராசர ஹோரா அறிவுறுத்தலின் படி ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்தில் சந்திரனும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் செவ்வாய் அல்லது சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் அவரின் 5 ஆம் வீடு பாதிக்கப்படும்.
இப்படிப்பட்ட பெண்ணின் ஜாதகத்தில் சற்று அசுப பார்வை, தோஷம் இருப்பதால் அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை இல்லாமல் இருப்பார்கள்.