கிளிநொச்சியில் மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ள குழி!
கிளிநொச்சி சிவபாத கலையக பாடசாலைக்கு முன்பாக, பாலம் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழி, அப்பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிளிநொச்சியில் நேற்று , பெய்த மழை காரணமாக , ஆரம்ப பிரிவு மாணவர்கள் இருவர் நீர் நிரம்பிய குறித்த குழிக்குள் வீழ்ந்த நிலையில், ஏனைய மாணவர்களால் காப்பற்றப்பட்டுள்ளதாக, பாடசாலை சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர், கரைச்சி பிரதேச சபையினரால், பாலம் ஒன்று அமைப்பதற்கு, குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில், சுமார் நான்கு அல்லது ஐந்து அடி ஆழத்தில் குழி வெட்டப்பட்டது.
இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக, குறித்த குழி நிரம்பி நீர் செல்வதனால் ஆழமற்ற குழி என கருதிய மாணவர்கள், அதனை கடந்த செல்ல முற்பட்ட போது, அதில் தவறி வீழ்ந்துள்ளனர்.
இதையடுத்து, அதிர்ஸ்டவசமாக உயர்வகுப்பு மாணவர்களால் , அவர்கள் காப்பற்றப்பட்டதாக , ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆபத்தான பகுதி என எந்தவிதமான எச்சரிக்கை சமிஞ்கையும் அங்கு இல்லாத நிலையில் குறித்த பகுதி காணப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


