நாட்டில் வறுமையின் கொடுமையால் தாய் ஒருவரின் விபரீத செயல்!
இலங்கையில் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தாய் ஒருவர் தானும் விஷத்தை பருகி 3 குழந்தைகளுக்கும் விஷம் பருக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோக சம்பவம் பதுளை - வேவெல்ஹின்ன தோட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் 31 வயதுடைய தாய், 7, 5 மற்றும் 4 வயதுடைய மூன்று பிள்ளைகளுமே இவ்வாறு விஷம் அருந்தியுள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பொருளாதார சுமை காரணமாக தற்கொலை செய்துக் கொள்ள முடிவெடுத்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதேசவாசிகள் குறித்த நால்வரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் வைத்தியர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.