தென் கடலில் நீராடச் சென்ற பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!
Galle
Sri Lanka
Sri Lanka Police Investigation
Tourism
Death
By Kirushanthi
காலி மாவட்டம் ஹிக்கடுவை- நாரிகம கடற்கரையில் நேற்று மாலை நீராடச் சென்ற பிரித்தானிய நாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெளிநாட்டவர் நேற்று மாலை 4.40 மணியளவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் உத்தியோகத்தர் வெளிநாட்டவரை பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர்
பிரித்தானிய பிரஜையான 60 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US