களு கங்கையில் மாணிக்கக்கல் எடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!
களுத்துறை - ஹொரண, போருவதந்த பகுதியில் உள்ள களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்றையதினம் (26-04-2024) பிற்பகல் களு கங்கையில் மாணிக்கக்கல் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, ஆபத்தான நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.