ஆயுதமொன்றில் தாக்கி நபர் ஒருவர் கொலை
பலாங்கொடையில் ஆயுதமொன்றில் தாக்கி ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பலாங்கொடை – புலத்கம பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரதான சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் தனிப்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற தாக்குதல்
இதனையடுத்து சந்தேகநபர் அவரது மகன் மற்றும் உறவினர் இருவர் இணைந்து உயிரிழந்தவரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 41 வயதுடைய குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதலுடன் தொடர்புடைய 68 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேகநபர் அவரது மகன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.