யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நடந்த சம்பவம்! சிசிரிவியில் சிக்கிய நபர்
யாழ். நெல்லியடி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2.5 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் திருப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை நேற்றையதினம் (04-02-2024) நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சிசிரிவி கமராக்களை பரிசோத்தால் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவரும் என்பதால், கமராக்கள் மூடப்பட்டதாக, இரு ஊழியர்களும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அறித்துள்ளனர்.
இதன்போது, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த சந்தேக நபர் ஒருவர் ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியையும், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பணத்தில் ஒரு இலட்சம் ரூபாயையும் திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து ஏனைய இடங்களில் உள்ள சிசிரிவி கமெராக்களை சோதனையிட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.