கொட்டகலையில் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த நபர்!
நுவரெலியா மாவட்டம் - கொட்டகலை பகுதியில் புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (07-02-2023) காலை 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கொட்டகலை சுரங்க வழி பாதைக்கு அருகாமையில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் மோதியதிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சுமார் 50 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவர் யார் என அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஹட்டன் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புகையிரத நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது புகையிரதத்தில் மோதுண்டு இறந்தாரா? என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.