குளிக்க சென்ற பல்கலைக்கழக மாணவனுக்கு நேர்ந்த துயரம்
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் நீராடச் சென்றபோது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவ மாணவர் இன்று (04) உயிரிழந்துள்ளார்.