இந்த பிரச்சனை இருப்பவர்கள் தக்காளி சாப்பிட கூடாதாம்
பல்வேறு உணவு வகைகளில் தக்காளி பயன்படுத்தப்படுகின்றது. தக்காளியில் நமது உடல் அரோக்கியத்திற்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.
எனினும் இதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. சில உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக தக்காளியை சாப்பிடக்கூடாது.
கீல்வாதம்
கீல்வாதம் உள்ளவர்கள் தக்காளியை சாப்பிட வேண்டாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வாயு மற்றும் அசிடிட்டி தொந்தரவு இருந்தாலும் தக்காளியை சாப்பிடக் கூடாது என்கிறார்கள்.
அதுவும் தவறுதலாக கூட தக்காளியை பச்சையாக சாப்பிடக்கூடாது.
சிறுநீரக கல்
ஒருவருக்கு சிறுநீரக கல் இருந்தால், தவறுதலாக கூட தக்காளியை சாப்பிடக்கூடாது.
ஏனெனில் தக்காளியில் கால்சியம் ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகத்தில் கற்களை உருவாக்க இது செயல்படுகிறது.
தக்காளி விதைகள் வயிற்றில் செரிக்கப்படாமல் சிறுநீரகத்தில் உறைந்துவிடும் இதன் காரணமாக கற்கள் பிரச்சனை தொந்தரவு செய்யலாம்.
மாதவிடாய்
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் தக்காளியை தவிர்க்க வேண்டும்.
இதனால் உடலில் பிரச்சனைகள் அதிகரிக்கும். இரத்தப்போக்கு இன்னும் அதிகமாகலாம்.
வாயு அமிலத்தன்மை
ஆயுர்வேதத்தின் படி வாயு-அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களும் தக்காளி சாப்பிடக்கூடாது.
இதை உட்கொள்வதால் உடலின் செரிமான நெருப்பு குறைகிறது மற்றும் ஜீரண சக்தி மோசமாக பாதிக்கப்படுகின்றது.
இதனால் அஜீரணம் மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
தோல் ஒவ்வாமை
சரும அலர்ஜி அல்லது உடலில் அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தக்காளியை தொடவே கூடாது. இது ஆபத்தாக முடியும்.
தக்காளி, உருளைக்கிழங்கு, பிரிஞ்சி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் காரமான பொருட்களை சாப்பிடுவது உடலில் பித்த தோஷத்தை அதிகரிக்கிறது.