எரிபொருள் வழங்க கோரி வீதிக்கு இறங்கிய மக்கள்
திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
திருகோணமலை கண்டி பிரதான வீதி கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியின் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வீதியால் சென்ற எரிபொருள் பௌசரை மறித்து நகர விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பின்பு எரிபொருள் உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பின்பு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.