மட்டக்களப்பு ஆயர் தொடர்பில் கசிந்த தகவல்! பேரதிர்ச்சியில் மக்கள்
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தைச் சேர்ந்த பங்கு மக்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் தம்மை வந்து சந்திக்குமாறு தாம் எழுத்து மூலமான கோரிக்கை
விடுத்தும் அவர் இதுவரையில் சந்திக்காத காரணத்தினால் உடனடியாக ஆயர் தம்மை
நேரில் வந்து சந்தித்து தமது பிரச்சனைகளைக் கேட்டறியும் வரை உண்ணாவிரதத்தில்
தேற்றாத்தீவு புனித யூதா ததேயு பங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.
இந்நிலையில், இப்பங்கு மக்களுக்கு தேற்றாத்தீவு புனித யூதா ததேயு திருத்தலம் தான் முக்கியமானதாகும்.
இதன் வளர்ச்சிதான் எமக்குத் தேவை. இவைகள் அனைத்தையும் முன்வைத்து நாம் ஆயருடன் கதைப்பதற்கு வருமாறு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தும் ஆயர் உரிய பதில் வழங்காததால், ஆயருடன் குறித்த பங்கிலிருந்து ஒருவர் தொலைபேசி வாயழலாக ஆயருடன் கதைக்க முட்டபட்ட போது குறித்த மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
அதில் குறிப்பிடப் பட்டுள்ளது வருமாறு....
தொடரும் உண்ணாவிரதம்
எனவே ஆயர் வந்து எமது குறைபாடுகளைக் கேட்டறியும் வரையில் எமது உண்ணாவிரதம் தொடரும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்தின் நிருவாகக் குரு அருட் தந்தை ஆர்.திருச்செல்வம்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.03.2024) காலை நான் பழுகாமத்தில் அமைந்துள்ள ஆலயத்திற்குச் சென்று விட்டு தேற்றாத்தீவு புனித யூதாதையர் திருத்தலத்திற்கு வந்து பார்க்கும் போது ஆலயத்தின் முன்னால் சிலர் உண்ணாவிரத்தில் இருப்பதாக அறிந்தேன் என பங்குத்தந்தை மேலும் குறிப்பிட்டுள்ளார்.
UKNNO