தமிழர் பகுதியில் இனம் தெரியா மோட்டார் சைக்கிள்காரர்களால் அச்சத்தில் மக்கள்!
அம்பாறையில் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் தலைக்கவசம் இன்றி பொதுப் போக்குவரத்தை குழப்பும் வகையில் அதி சக்தி இயந்திரம் கொண்ட மோட்டார் சைக்கிளில் வருகை தந்து அச்சுறுத்தி வருகின்றனர்.
வீதிகளின் நடுவே அதிவேகமாக பயணம்
குறித்த மோட்டார் சைக்கிளில் இருவர் தனியாக வருவதுடன் அதிக சத்தம் கொண்ட ஒலி எழுப்பி வீதிகளின் நடுவே அதிவேகமாக பயணம் செய்து ஏனையோரை அச்சுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு அப்பகுதி நாடாளுன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உட்பட சிலர் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.
வீதி போக்குவரத்து சட்டத்தை மதிக்காமல் தொடர்ச்சியாக பாடசாலை நாட்கள் அலுவலக நாட்களிலும் மிக வேகமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்தி சாகசங்களை மேற்கொண்டு வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.