மக்கள் கைகொடுக்காவிட்டால் சிறைசெல்வதை தவிர வேறு வழியில்லை; கலங்கும் மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்ற உத்தரவின்படி தம்மால் செலுத்தவேண்டிய 10 கோடி ரூபாவை மக்கள் பணம் தராவிட்டால் தான் சிறைக்குச் செல்லத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவித்துள்ளார்.
அதோடு எந்தவிதத்திலும் வழங்கமுடியாது என்றும், அந்தளவு பொருளாதாரப் பலம் தமக்குக் கிடையாது என்றும் அவர் மீண்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கூறுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பில் 10 கோடி ரூபாவை செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் எந்தவிதத்திலும் எனக்கு 10 கோடி ரூபாவை வழங்கக்கூடிய பொருளாதார பின்புலம் கிடையாது. மக்கள் அதனைத் திரட்டித் தருவர் என்றே நான் எதிர்பார்க்கின்றேன்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணத்தைத் திரட்டுவதற்கு என்னிடம் மோட்டார் சைக்கிள் ஒன்றுகூட கிடையாது என வருத்தம் தெரிவித்த மைத்திரி, அவ்வாறு மககளிடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால் தான் சிறைக்குச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.