பொலிஸாருக்கு தகவல் கொடுத்தவர் கொலை ; 6 மாதங்களின் பின் சிக்கிய நபர்கள்
நபரொருவரை கடத்திச் சென்று மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்து, சடலத்தை குழி ஒன்றில் வீசி தப்பிச் சென்ற கும்பலைச் சேர்ந்த இருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் 6 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
உளவு பார்த்து பொலிஸாருக்கு தகவல்
சந்தேக நபரிடமிருந்து மன்னா கத்தி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. களுத்துறை, மொரந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடையவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் உளவு பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்பட்டு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், கொலை செய்யப்பட்டவர் குற்றச் செயல்கள் தொடர்பில் உளவு பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.