கிளிநொச்சியில் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!
கிளிநொச்சி தர்மபுரம் - புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச் சோதனையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாடுகளை ஏற்றி கொண்டு செல்ல முற்பட்ட கப்ரக வாகனத்தின் வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் போது, 7 கால்நடைகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கால்நடை கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியர் சான்றிதழ் இன்மை மற்றும் வாகனத்தில் கால்நடைகள் ஏற்று செல்லக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களுக்காக இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் 21.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.