சட்டவிரோதமாக மணல் ஏற்றிய இருவருக்கு நேர்ந்த கதி!
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து சிறிய ரக பட்டா வாகனம் ஒன்றிலும் மற்றும் உழவு இயந்திரம் ஒன்றிலும் ஏற்றி சென்ற இருவரை 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவானும் மேலதிக நீதவானுமாகிய கருப்பையா ஜீவராணி இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டார்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் நேற்று புதன்கிழமை சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து அதனை சிறியரக பட்டா வாகனத்திலும் உழவு இயற்திரத்திலும் ஏற்றி சென்ற இருவரை பொலிசார் கைது செய்ததுடன் வாகனங்களையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை இன்று வியாழக்கிழமை (29) களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது சிறிய ரக பட்டா வாகனத்தில் மணல் ஏற்றியவருக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவையும்,. உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றியவருக்கு ஒரு இலட்சம் ரூபாவுமாக 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.