நோயாளி உயிரிழப்பு; உறவினர்களால் வைத்தியம் பார்த்த மருத்துவர் தீவிர சிகிற்சைப்பிரிவில்!
நோயாளி ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததனை அடுத்து அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் மீது உயிரிழந்தவரின் உறவினர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான நோயாளியே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உறவினர்களால் தாக்குதலுக்குள்ளான வைத்தியர் குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வைத்தியரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளை வைத்தியசாலையின் வைத்தியர்கள் வைத்தியசாலை வளாகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.