நடுவானில் விமானத்தில் உயிரிழந்த பயணி: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நேவார்க் நகருக்குப் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியில் இருந்து வழக்கம் போல ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவின் நேவார்க் (Newark) நகருக்குப் புறப்பட்டது.
இருப்பினும், ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வெறும் 3 மணி நேரத்தில் திடீரென அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட, அந்த விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதாக ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில் உடனடியாக டெல்லி விமான நிலைய மருத்துவக் குழு விமானத்திற்குச் சென்றது. அந்த பயணியைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் குறித்த நபர் உடல்நலக்குறைவாலேயே உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த அந்த ஆண் பயணி அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றதும் தெரிய வந்தது.
இதனை அடுத்து உயிரிழந்த நபரின் உடலை அமெரிக்கா எடுத்துச் செல்ல தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய குழு மூலம் மாலை மீண்டும் விமானம் அமெரிக்கா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.