பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த வங்கி ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
கல்குடா – பாசிக்குடா கடலில் நீராடிக் கொண்டிருந்த நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில் நேற்றையதினம் (29-04-2024) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த குழுவினர் ஒன்று சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை (28-04-2024) பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே அதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இதையடுத்து காணாமல் போன நபரை கல்குடா டைவர்ஸ் அணியினர் நேற்று 3 மணித்தியாலங்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று தீவிர தேடுதலின் பின்னர் நீரில் மூழ்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.