நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகத்தை நிறுவுவதற்கு ஒப்புதல்!
இலங்கை நாடாளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவுவதற்கான மசோதாவுக்கு பொது நிதிக் குழு (COPF) ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ஒரு திருத்தத்திற்கு உட்பட்டு உரிய சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நீண்ட காலத்திற்கு பின்னேரேனும் வரவு செலவுத் திட்ட அலுவலகம் நிறுவுவது, மிகவும் முக்கியமானதொரு நடவடிக்கை எனவும் குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டப் பகுப்பாய்வுச் செயற்பாட்டிற்குத் தேவையான சுதந்திரத்தை இந்தச் செயற்பாடு உறுதிப்படுத்தும் எனவும் அரசாங்க நிதிக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தொிவித்துள்ளார்.