பெற்றோர்கள் அறியாமல் செய்யும் தவறால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்!
இலங்கையில் தனது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அறியாமல் பரசிட்டமால்ட் அதிகளவு கொடுப்பதன் காரணமாக குழந்தைகளின் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகும்போது சில பெற்றோர்களால் அதிகளவு பரசிட்டமால்ட் கொடுக்கப்படுவதால் அவர்களின் நிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மருத்துவர் பரிந்துரைத்த அளவில் மாத்திரம் பரசிட்டமால்ட் மருந்தை கொடுக்க வேண்டும் என்றும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பரசிட்டமால்ட் மருந்து கொடுக்க வேண்டுமா என்றும், மேலும் குழந்தைக்கு கூடுதல் டோஸ் பரசிட்டமால்ட் கொடுக்க வேண்டுமா என்றும் வைத்தியர்களிடம் ஆலோசனை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஏதேனும் மேலதிக ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.