பராபவ தமிழ் புத்தாண்டு ; துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்கு எப்படி இருக்கும்!
தமிழ் புத்தாண்டான பராபவ வருடம் வருகிற ஏப்ரல் 14 ஆம் திகதி பிறக்கவுள்ளது.
இந்த புத்தாண்டில், ராஜாவாக குரு வருகிறார். குரு பகவானின் பயணம் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியில் ஆரம்பித்து ஆனி மாதம் கடக ராசியில் இடப்பெயர்ச்சியாகிறது. புரட்டாசி மாதம் சிம்ம ராசிக்கு அதிசாரமாக பயணம் செய்கிறார் குரு பகவான்.

கோடீஸ்வர யோகம்
சனி பகவான் மீன ராசியில் ஆண்டு முழுவதும் இருக்கிறது. கும்ப ராசியில் பயணிக்கும் ராகு மார்கழி மாதத்தில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார்.
கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். பராபவ வருடத்தில் சில மாதங்கள் கேதுவும் உச்சம் பெற்ற குருவும் இணைந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.
துலாம்: பராபவ தமிழ் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.குருவின் பயணத்தால் வேலையில் கவனம் தேவை. திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. ராகு கேதுவின் பயணம் திடீர் ஜாக்பாட் யோகத்தை தரப்போகிறது. வெளியூர் பயணங்கள் லாபத்தை கொடுக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
விருச்சிகம்: பராபவ தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்கு இந்த ஆண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக உள்ளது. குரு கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி உச்சம் பெற்று அமரப்போவதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. நினைத்த காரியம் கைகூடி வரும். பணம் விசயத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது அவசியம். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும். வேலை செய்யும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கலாம், ஆனால் விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும். ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு பண வருமானத்தை அதிகரிக்கும். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துக்கள் லாபத்தை கொடுக்கும்.
தனுசு: நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் சுபமாக முடியப்போகிறது. குருவின் நேரடி பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் வருமானம் சீராகவே இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ராகு கேதுவின் பயணம் சாதகமான இடத்தில் உள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகப்போகும் ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்க கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்.
மகரம்: குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உச்சம் பெற்ற குருபகவானின் பார்வையால் சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நல்ல வேலை கிடைக்கும்.கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டதால் உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்.
கும்பம்: குரு பகவானின் பயணமும் பார்வையும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியம் கைகூடி வரும். திருமணம் சுப காரிய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பண வருமானம் அதிகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் குடும்பத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
தமிழர் பகுதியில் 16 வயதுச் சிறுவனை பலிகொடுக்க முயற்சி ; அரச அதிகாரி உள்ளிட்ட குழுவிற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
மீனம்: பராபவ தமிழ் புத்தாண்டு மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிகளை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் நடைபெறும். சொந்த தொழில் செய்பவர்களுக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாக இருந்தாலும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீரப்போகிறது. ஆண்டு முழுவதும் சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது.