விண்ணதிர்ந்த அரோகரா கோக்ஷங்கள் ; மிக பிரம்மாண்டமாக இடம்பெற்ற பழனியாண்டவர் கும்பாபிஷேகம்!
முகப்பெருமானின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தலங்களில் தமிழகத்தில் அமிஅந்துள்ள பழனி தண்டாயுதபாணி சுவாமி ஆலயமும் ஒன்றாகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும் என்பது ஆகம விதியாகும்.
இந் நிலையில் பல முறை கும்பாபிஷேகம் நடத்த முயற்சித்தும் 2018ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய கும்பாபிஷேகம் பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக கும்பாபிஷேகம் பணிகள் நடைபெறத் தொடங்கி கடந்தவாரம் முடிவுற்றது. இதையடுத்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
மலைக்கோயிலில் இன்று காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகொப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு பழனியில் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்ததால் நகரமே விழாக்கோலம் பூண்டது. முருக்கப்பெருமானின் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியிலுள்ள மலைக்கோயிலில் முருகன் தண்டாயுதபாணியாக வீற்றிருந்து மக்களுக்கு காட்சியளிக்கிறார்.
ஞானப்பழம் குறித்து எழுந்த சர்ச்சையில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு முருகக் கடவுள் வந்து குடியேறிய இடம் என சிறப்பு பெற்றது பழனி மலை. பழனி மலையில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு (2006) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் நாட்கள் தள்ளிப்போய்க் கொண்டிருந்த பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணதிர்ந்த பக்தர்களின் அரோகரா கோக்ஷங்கள் முழங்க இன்று மஹா கும்பாபிசேகம் இடம்பெற்றது.
அதேவேளை பெப்ரவரி 5 ஆம் திகதி முருகனுக்கு சிறப்பான தைப்பூசம் இடம்பெறவுள்ள நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கும்பாபிக்ஷேகம் நடைபெற்றுள்ளமை பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் பரவசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.