யாழில் மூன்று தசாப்தங்களின் பின் திறக்கப்பட்ட வீதி ; மக்கள் பொங்கல் பொங்கி உற்சாகம்!
ஜனாதிபதி அனுர அரசாங்கத்தினால் யாழ்ப்பாணம் வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை - பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக இன்றைய தினம் (9) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் , மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.
15 வருட கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்தது.
உள்ள்நாட்டுபோர் முடிவுக்கு வந்து மக்கள் பாவனைக்கு வீதி விடப்படத நிலையில், குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் (9) வீதி கட்டுப்பாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீதியில் தேங்காய் உடைத்து , பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.