இந்தியாமீது சீன ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்
சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கிய ஏவுகணை மூலம் இந்தியாவை தாக்க முயற்சித்ததாகவும், ஆனால் அந்த ஏவுகணைகளை இடையிலேயே வழிமறித்து இந்தியா அழித்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானை இந்தியா தாக்கியது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் பழிவாங்கும் நடவடிக்கை
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த தாக்குதல் நடந்தது இந்த நிலையில், இந்திய தாக்குதலுக்கு பதிலாக சீனாவிடம் இருந்து வாங்கிய சில ஏவுகணைகளை பாகிஸ்தான் ஏவியதாகவும், சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இந்த ஏவுகணைகளை இந்தியா இடையிலேயே வழிமறித்து அழித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளால் இந்தியாவுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.