புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண் விருது!
மறைந்த புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, பட்டிமன்ற பேச்சாளர் பாப்பையா, அவர்களுக்கும் இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருது விழா நடத்தப்படவில்லை.
அந்த (2020) ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (08) திங்கட்கிழமை நடைபெற்றது.
இதனையடுத்து 2021ஆம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் காலையில் பாதி பேருக்கும் மாலையில் மீதி பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கான பத்ம விபூஷண் விருதை அவரது மகன்எஸ்.பி.சரண் பெற்றுக் கொண்டார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் களை பாடியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் திகதி அவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார்.
ஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்குப் பிறகு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே 2001இல் பத்ம ஸ்ரீ விருதையும் 2011இல் பத்ம பூஷண் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை அனிதா, பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத் ஆகியோர் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர். பின்னணி பாடகி சித்ரா, மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ராமகாஜனுக்கு பத்ம பூஷண், சிற்ப கலைஞர் சுதர்சன் சாஹோவுக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.