நாட்டை விற்று தரகு பணம் வாங்கும் அரசாங்கம்!
இந்த அரசாங்கம் நாட்டை விற்று தரகு பணம் வாங்குகிறதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இதனை இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த அவர், இந்த அரசாங்கம் மக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பயந்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள்,கைவினைஞர்கள் அனைத்து மக்களும் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர். அதற்கு இந்த அரசாங்கம் பொலிசாரை பயன்படுத்தி மக்களை மிரட்டி அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.
அதோடு நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த இளைஞனை எம்பிலிபிடிய பணாமுற பொலிஸார் தாக்கியதில் சிறுவன் உயிரிழந்தமையையும் அவர் நினைவூட்டினார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்திய வண்ணம் நாடாளுமன்றத்தினுள் கோஷங்களை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.