பெயர் தான் ஞாபகம் ...காலையில் சாப்பிட்டது கூட ஞாபகம் இல்லாத டெய்சி ஆச்சி
டெய்சி ஆச்சிக்கு பெயர் மட்டும் தான் ஞாபகம் இருக்கு காலையில் சாப்பிட்டது கூட ஞாபகம் இல்லை என்றும் , இந்நிலையில் அவருக்கு 2013-ம் ஆண்டு பரிவர்த்தனைகள் எப்படி ஞாபகம் இருக்கும் என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இலங்கை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச தலைவராக இருந்த கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு எதிராக 2016 முதல் குற்றப் புலனாய்வுத் துறை பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது.
ஐம்பத்து ஒன்பது மில்லியனுக்கும் அதிக பண மோசடி
மோசடியில் ஐம்பத்து ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் நிலையான வைப்புத்தொகை தொடர்பாக விசாரணையில் தெரியவந்தது.
அந்த வங்கிக் கணக்கை யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் விக்கிரமசிங்கே ஆகியோரே நடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை தொடர்பாக அறிக்கை பெறுவதற்காக தொண்ணூற்று ஏழு வயதான டெய்சி ஃபாரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுத் துறையால் அழைக்கப்பட்டார்.
அறிக்கை பெற்ற பிறகு கைது செய்யப்பட்ட அவர் கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள், வருமானத்தை வெளிப்படுத்த முடியாத ஐம்பத்து ஒன்பது மில்லியன் ரூபாய் கூட்டு கணக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
அதோடு டெய்சி ஆச்சி மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், அங்கு பிரதிவாதி சார்பில் வழக்கறிஞர் பிணை கோரியதுடன், இந்த சம்பவத்தின் ஆரம்ப விசாரணை 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்றும், 2017 ஆம் ஆண்டில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கான விசாரணை சுருக்கக் கோப்பு தாக்கல் செய்யப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
என் வாடிக்கையாளர் விசாரணை தொடர்பாக பத்து வருடங்களுக்கு முன்பு முதல் அறிக்கை அளித்தார். இப்போது அவருக்கு வயது தொண்ணூற்று ஏழு. உடல் பலத்தால் அவரால் நகர முடிந்தாலும், அவரது நினைவாற்றல் நன்றாக இல்லை.
அவரது பெயரைத் தவிர வேறு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை என குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாது அவர் காலையில் என்ன சாப்பிட்டார் என்பது கூட அவருக்கு நினைவில் இருக்காது.
அத்தகைய சூழ்நிலையில், 2013 இல் வங்கிக் கணக்கில் நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை அதிகாரிகள் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் கூறினார்.
இதனையடுத்து குற்றவாளிக்கு பிணை வழங்குவதை எதிர்ப்பதில்லை என குற்றப் புலனாய்வுத் துறை கூறியதை அடுத்து ,சமர்ப்பிக்கப்பட்ட விஷயங்களை கருத்தில் கொண்ட கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குற்றவாளியை ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று தனிநபர் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டது