இளம் கன்று பயமறியாது அதற்காக இப்படியா......பாம்பை கடித்துக் கொன்ற குழந்தை !
பாம்பென்றால் படையும் நடுங்கும் எந்பது பழமொழி. ஆனால் இந்தியாவின் பீகாரில் ஒரு வயதுக் குழந்தை பாம்பைக் கடித்த நிலையில் பாம்பு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கயாவில் உள்ள ஜாமுகர் கிராமத்தில் கடந்த வாரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விளையாட்டுப் பொருள் என பாம்பை கடித்த குழந்தை
வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆண் குழந்தை அங்கு வந்த பாம்பை விளையாட்டுப் பொருள் என்று கருதி கையில் எடுத்து வாயில் வைத்து கடித்துள்ளது.
குழந்தை தனது வாயில் பாம்பை வைத்து மென்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்த தாய், குழந்தையிடம் இருந்து பாம்பைப் பிடுங்கி வீசிவிட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். குழந்தை கடித்ததில் பாம்பின் உடலின் ஒரு பகுதி நைந்த நிலையில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த பாம்புக்கு விஷத்தன்மை இல்லாததால் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேளை அப்பகுதியில் மழைக்காலத்தில் அவ்வகை பாம்புகள் அதிகம் காணப்படுவது வழக்கமாக உள்ளதாக கூறப்படும் நிலையில் , குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.