மாயமான இளஞர்களில் ஒருவர் சடலமாக மீட்பு
களனி கங்கையின் நவகமுவ மாபிடிகம, பாலத்துக்கு அருகில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூன்று இளைஞர்கள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று (01) காலை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூவர் மாயம்
சம்பவத்தில் கண்டி ஹபரகல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜனித் மகேந்திரா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் நால்வர நேற்று (31) ஆற்றில் நீராடச் சென்றனர்.
இதன்போது, அவர்களில் ஒருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டு மேலும் இருவர் அவரைக் காப்பாற்றச் சென்றபோது அவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்