வாகனத்தில் மோதவிருந்த சிறுமியை காப்பாற்ற முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!
காலியில் ஒட்டோவில் மோதவிருந்த சிறுமியை காப்பாற்ற முயன்ற மூதாட்டி அதே முச்சக்கரவண்டியில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் பெந்தோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ரொபோல்கொட பகுதியில் மாலை நேர வகுப்புக்குச் சென்ற பேத்தியை அழைத்துவரும் போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் பெந்தோட்டை ரொபோல்கொட பகுதியைச் சேர்ந்த மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.