முல்லைத்தீவு பேக்கரியின் சீர்கேடு; இழுத்து மூடிய அதிகாரிகள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பிரிவு பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகத்தில் இன்று (17) ஒட்டுசுட்டான் வைத்திய அதிகாரியின் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு திடீர் சோதனை நடத்தி இருந்தனர்.
உற்பத்தி பொருட்கள் அழிப்பு
இதன்போது மனித நுகர்விற்கு ஒவ்வாத 25 கிலோவிற்கு மேற்பட்ட உற்பத்தி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
குறித்த வெதுப்பகம் சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வருவதனால் குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை மூடப்பட்டுள்ளது.
அத்துடன், 10 நாட்களில் சுகாதார குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படவேண்டும் எனவும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாது இருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுச்சுகாதார பரிசோதகரினால் வெதுப்பக உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.