பெண்ணை கட்டிவைத்து தாக்கிய அதிகாரிகள்; நடந்தது என்ன?
சிலாபம் - பங்கதெனிய பகுதியில் வியாபாரம் செய்துவந்த பெண் ஒருவரை மரத்தில் கட்டி வைத்து, கூட்டுறவு அதிகாரிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளை தாய் எனவும், அவர் தற்போது சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை
குறித்த பெண், பங்கதெனிய சந்தியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்திற்குப் பின்னால் ஒரு சமையலறையை கட்டி பல ஆண்டுகளாக சிறு வியாபாரத்தை நடத்தி வந்துள்ளார்.
அந்தக் கட்டிடம் சமீபத்தில் சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தால் வாங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கூட்டுறவு கட்டிடத்துடன் கூடிய நிலத்தை வாங்கிய போதிலும், பெண் தனது வியாபார இடத்தை விட்டு நகரவில்லை.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் மற்றும் பிற ஊழியர்கள் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, பெண்ணை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகின்றது.
அதேவேளை கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்த பெண் முயற்சித்தாகவும், எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை என சிலாபம் பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சரத் விஜேசிங்க கூறியுள்ளார்.