சா/த பரீட்சையை நடத்துவது தொடர்பில் பாராளுமன்றில் நடந்த விவாதம்
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் மின்சாரம் மற்றும் போக்குவரத்து முறைகளில் ஏற்படும் பற்றாக்குறையினால் பாதிக்கப்படாத வகையில் வேலைத்திட்டமொன்றை வகுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படாமையால் பரீட்சைக்கு முகம் கொடுப்பதில் தீர்மானமில்லாமல் இருப்பதாகத் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சர் இல்லாத நிலையில், போக்குவரத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் முக்கிய கவலை அவர்களுக்கான பொதுப் போக்குவரத்து ஆகும். இதற்கு உடனடி யாக தீர்வு காணப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதன் போது தெரிவித்தார்.