அரசாங்க மருத்துவமனைகளிள் அவலநிலை; அவதிப்படும் நோயாளர்கள்
நாடளாவிய ரீதியில் அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல மாதங்களாக இயங்காத சிடி ஸ்கானர்கள்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன, குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி ,களுத்துறை, ஹொரன தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை, மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை சில மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் பல மாதங்களாக இயங்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்க மருத்துவமனைகளை நாடும் வறியமக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றதாகவும், அவர்களால் தனியார் மருத்துவமனைகளிற்கு செல்ல முடியாது எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்
எனவே அரசாங்கம் இந்த இயந்திரங்களை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த இயந்திரங்கள் இயங்க மறுத்துள்ளதால் சில நோய்களை அடையாளம் காண்பதில் மருத்துவர்களும் சிரமங்களை எதிர்கொள்வதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.