NPP அரசாங்கம் ஜனநாயக முறைமையை அடக்க முயற்சி ; முன்னாள் ஜனாதிபதி ரணில்
தற்போதைய அரசாங்கமானது நாட்டின் ஜனநாயக முறைமையையும் எதிர்க்கட்சியையும் அடக்கும் செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 80வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (06) கருத்துத் தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கம், வைத்தியர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிராகவும் அரசாங்கம் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளுக்குக் கட்டுப்பாடுகளையும் இடையூறுகளையும் விதிப்பதுடன், எவ்வித காரணமும் இன்றி அரசியல்வாதிகளைக் கைது செய்து ஜனநாயகம், எதிர்க்கட்சி மற்றும் சுயாதீன தொழிற்சங்கங்களை அடக்கும் பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.