மின்சார சபை பொறியலாளர்களின் அதிரடி அறிவிப்பு
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் இன்று நண்பகல் 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சட்டப்படி வேலை நிறுத்த பேராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேராட்டம் நடைபெறும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இன்று காலை 08:30 முதல் மாலை 4:15 மணி வரை மட்டுமே பணிக்கு வருவார்கள் என்றும் அந்த சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மின் துண்டிப்பு மற்றும் அவசர நடவடிக்கையின்போது, வேலை நேரத்துக்கு மேலதிகமாக கடமைக்கு வருவதாகவும் அந்த சங்கம் அறிவித்துள்ளது.