பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு ; கடமைக்கு வராத OIC-க்கு வலைவீச்சு!
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கடந்த மூன்று நாட்களாக சேவையில் ஈடுபடவில்லை என பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து கடமையாற்றுவது கடினம்
பிரதான பொலிஸ் பரிசோதகர், தொடர்ந்து கடமையாற்றுவது கடினம் என பொலிஸ் புத்தகத்தில் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல்களை அறிய, பொலிஸ் உளவுத்துறை அதிகாரிகளும் களமிறக்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது
மாயமான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பில் நேற்று வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை வெலிக்கடை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் மீண்டும் பதவியேற்று கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் பல மாதங்களுக்கு முன்னர் தம்புத்தேகம தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.