போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் பங்குகொள்ளவில்லையா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கு (Gotabaya Rajapaksa) எதிரான போராட்டங்களில் வடக்குக் கிழக்குத் தமிழர்கள் ஏன் பங்குகொள்ளவில்லை என்ற கேள்விகள் சிங்கள சமூகவலைத்தளங்களில் தொடர் விவாதங்களாக வருகின்றன.
பலர் இனவாத நோக்கில் தமிழர்கள் குறித்துப் பதிவிடுகின்றனர். வேறு சிலர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை நியாயப்படுத்திப் பதிவிடுகின்றனர்.
சனத் பாலசூரிய என்ற சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் பதிவுக்கு இலங்கையின் முத்த பத்திரிகையாளர் Amirthanayagam Nixon பதில் பதிவு இட்டபோது,
Sandali Rathnayake-என்ற சிங்கள பெண் ஒருவர் இனவாதக் கேள்விகளை என்னிடம் முன்வைத்தார். (இவர் போன்று வேறு சிலரும் என்னுடன் முரண்படுகின்றனர்) தனது கேள்விக்குப் பதில் வழங்காமல் ஓடவேண்டாம் எனக் கிண்டலாகவும் பதிவிட்டிருந்தார்.
அவருக்கு நான் வழங்கிய பதில் பதிவு கீழே உண்டு.
இப்படியான இனவாதக் கேள்விகளைக் கேட்டு சிங்கள அரசியல் தலைவர்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தாதீர்கள். இனப்பிரச்சினை உருவானதன் காரணம் நீங்கள் அறியாதவர்கள் அல்ல.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது தான் உண்மை. இதை ஏற்றுக்கொள் - தயவுசெய்து உண்மையைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வைக் கொண்டு வாருங்கள்.
வெறும் விவாதம் வேண்டாம். போரில் பல சிங்களவர்கள் கொல்லப்பட்டதை மறுக்க முடியாது. ஆனால் தமிழ் மக்களின் உயிர்களும் உடமைகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. 2009 இறுதிப் போரில் அதுதான் நடந்தது.
முஸ்லிம்கள் சிங்களவர்களைக் கொன்றதில்லை. 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வித்தியாசமானது. அதற்காக முஸ்லிம்களைக் குறை கூற முடியாது. ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
அரசின் கட்டமைப்பு அதிகாரம் இல்லாத தமிழ் சமூகத்தின் மீது தயவு செய்து குறை காண முயற்சிக்காதீர்கள். எழுபது ஆண்டுகளுக்கும் மேலான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இந்த உண்மையைத்தான் தற்போதைய பொருளாதார நெருக்கடி சிங்கள மக்களுக்கு தெளிவாக உணர்த்தி வருகிறது.
உங்களுடன் நிறைய உரையாடல் செய்ய விருப்பம். ஆனால் முகநூல் சரியான இடம் அல்ல. நான் எழுதும் அரசியல் கட்டுரைகளை உங்களால் தமிழில் படிக்க முடியாது.
உங்களுடன் வாதிடுவது எனது நோக்கமல்ல. மனதில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கிறது.
பௌத்த வரலாறுகள் மற்றும் தொடர்புடைய சிங்கள மொழிகள் தமிழ் மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இதேபோல் திணிக்கப்பட்டுள்ளன.
2009ஆம் ஆண்டு போருக்குப் பின்னரான சூழலில் வடக்கு கிழக்கில் தமிழர் வீட்டுத் திட்டங்களில் சிங்கள மரபுச் சின்னங்கள் திணிக்கப்படுகின்றன.
அதுவும் 2016ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில். இவை அனைத்தையும் பற்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர்.
ஆனால் எந்த சிங்கள அரசியல் தலைவர்களும் செவிசாய்க்கவில்லை. இப்படிச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. என இலங்கையில் சிரேஸ்ட ஊடகவியாளர் Amirthanayagam Nixon பதிவிட்டுள்ளார்.
