சொந்த சகோதரனால் ஏற்பட்ட துயரம்... ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் நபர்
நுரைச்சோலை பகுதியில் உள்ள கரம்ப பாலத்திற்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மதுரங்குளிய பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காணி தொடர்பான தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்ற அவரது சகோதரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.