புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை: மறுக்கும் அங்கஜன் எம்.பி!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் புதிதாக எவரும் நியமிக்கப்படவில்லை என அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும்க் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கான பிரதமர் அலுவலக பிரதிநிதியொருவரின் பெயர் பரிந்துரை மாத்திரமே இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதுதொடர்பான கடிதம் எமக்கு கிடைத்துள்ளதாக கூறிய அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், புதிய நியமனமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளியாகிய அனைத்து செய்திகளும் பொய்யானவை என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, “யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கு எதிரான முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன” என்ற செய்தி அறிக்கையிடல்களும் போலியானவை என்றும் அங்கஜன் தெரிவித்தார்.
ஒரு சில சுயலாப ஊடகவியலாளர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் போலிச்செய்திகளே அவை எனவும் அங்கஜன் கூறியுள்ளார்.
அதேவேளை யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவிற்கு பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதுது.