இணையவழி பாலியல் ; மாதத்திற்கு 8 காணொளி ; தம்பதிகளால் அம்பலமான பகீர் தகவல்
அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இணையவழி பாலியல் உள்ளடக்க தயாரிப்பை நாடுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளம் தம்பதியினர், தங்கள் அடையாளங்கள் மறைக்கப்பட்டு, இத்தகைய நடவடிக்கைகளை வீட்டிலிருந்தே இரகசியமாக மேற்கொள்ள முடியும் என ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தம்பதிகளால் அம்பலம்
இணையத்தில் பாலியல் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது, தயாரிப்பது அல்லது விநியோகிப்பது இலங்கையில் சட்டவிரோதமானது என்றும், சம்பந்தப்பட்ட நபர்கள் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இத்தகைய சம்பவம் தொடர்பில் திருமணமான தம்பதியினர் இருவர் நுகேகொடை பிரிவுக்குரிய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
கணவர் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் பட்டதாரி என்றும், மனைவி மற்றொரு தனியார் நிறுவனத்தில் மனோதத்துவவியலில் டிப்ளோமா பட்டம் பெற்றவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருவரும் வேலையை இழந்த பின்னரும், நிதி நெருக்கடியைச் சந்தித்த பின்னருமே பாலியல் உள்ளடக்கத் தயாரிப்பை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறித்த தம்பதியினர் கடந்த ஆண்டு நவம்பரில் வெளிநாட்டு இணையத்தளத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், அதன்படி அவர்கள் மாதத்திற்கு 8 காணொளிகளை வழங்க வேண்டும் என்றும் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை இணையத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் மூலம் பாலியல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஒரு குற்றமாகும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.