தனக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் கெஹெலிய ஆதங்கம்
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஐக்கிய மக்கள் சக்தியினால் தனக்கு எதிராகக் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் சமர்ப்பித்துள்ள சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ள அனைத்து விிடயங்களும் உண்மைக்கு புரம்பானது என விஞ்ஞான ரீதியில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதான குற்றச்சாட்டாக தரமற்ற மருந்துப் பொருட்களின் இறக்குமதி செய்து விநியோகித்ததனாலேயே மருந்து ஒவ்வாமை காரணமாக நோயாளர்களின் மரணங்கள் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தற்போது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட வைத்திய நிபுணர்களின் பங்குபற்றலுடன் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழுவினால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை குறித்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எனக்கு அறியத்தந்தார்கள்.
அதனால் எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவாக விவாதித்து வாக்களிப்பதற்காக சபாநாயகரிடம் நாள் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டால் அதற்கு முன்னுரிமை வழங்குவது பாராளுமன்றத்தின் சம்பிரதாயமாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் அந்த சம்பிரதாயத்தை மீறி நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை காலம் கடத்தி வருகிறார்.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் நூற்றுக்கு 90வீதம் இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
அதனால் தரமற்ற மருந்து வகைகளை சுகாதார அமைச்சு இறக்குமதி செய்திருப்பதாக எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.