திருகோணமலையில் பாரிய விபத்து: 3 வயது குழந்தை உட்பட நால்வர் வைத்தியசாலையில்!
Sri Lanka Police
Trincomalee
Accident
By Shankar
திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய தினம் (28-04-2023) இடம்பெற்றுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 வயது குழந்தை உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக 3 வயதான குழந்தையும், தந்தையும் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US